Posts

Showing posts from 2020

மூச்சுக்காற்றின் மூல ரகசியங்கள்

Image
 *மூச்சுக்காற்றின் மூல ரகசியங்கள்*  நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது. நம்மை வழி நடத்துகின்றது. நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம். படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக்கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும். மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும் அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து ந...

திருமந்திரத்தில் உள்ள பாடல் விளக்க உரை

Image
 திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின்  விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது. நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை. பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்...

ஏழு ஆதார சக்கரங்கள்

Image
 மனித இயக்கத்தின்  ஏழு  ஆ தா ர  சக்கரங்கள் 1. மூலாதாரம்   முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 2. சுவாதிஷ்டானம் இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் ம...

கோயிலுக்குச் செல்லும் பொழுது

Image
 எனதன்பு சொந்தங்களே கோயிலுக்குச் செல்லும் பொழுது  பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் 1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும். 3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது. 5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். 6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும். 7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது. 8. கவர்ச்சியான ஆடைகள், ஈரத்துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. 9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு. கோயிலுக்குள் இருக்கும்பொழுது. 10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. 11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு...

ஐந்து பிரகாரங்கள்

Image
  கடவுள்= கட + உள் உன்னில் கடந்து சென்றால் கடவுள் தமிழகத் திருக்கோயில்களில் இருக்கும் ஐந்து பிரகாரங்கள் மூல அமைப்பு போல நம்மிடம் உள்ள உணவு உடம்பு, மூச்சு உடம்பு, மன உடம்பு, அறிவு உடம்பு, இன்ப உடம்பு ஆகியவற்றை கடந்து சென்றால் கடவுளை காணலாம்.  உடல்களை கோஷங்கள் ஆகவும் கூறலாம். உணவு உடம்பு அன்னமயகோசம், மூச்சு உடம்பு பிராணமய கோசம், மன உடம்பு மனோமய கோசம், அறிவு உடம்பு விஞ்ஞான கோசம், இன்ப உடம்பு ஆனந்தமய கோசம். உணவு உடம்பு அல்லது அன்னமயகோசம் இது சரி செய்வதற்கான பயிற்சிகள் உடலைத் தளர்த்தும் பயிற்சிகள் அதாவது ஆசனங்களை செய்ய வேண்டும். கிரியைகளை செய்து உடலின் உட்புறத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது மூச்சு உடம்பு அல்லது பிராண மய கோசம் . முறையான மூச்சுப் பயிற்சிகளை தினமும் செய்யவேண்டும். பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சிகளை செய்து மின்சாரம் போன்ற உயிர் மூச்சை சீர் செய்தல் வேண்டும். மூன்றாவது மன உடம்பு அல்லது மனோமய கோசம் . தினமும் தியானம் செய்ய வேண்டும். கடவுள் மீது செலுத்தும் பக்திக்கும், பற்றுக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டு இயற்கைக்கு மாறான செயல்களை செய்வதை தவிர்க்க வ...

தமிழர்களின் அற்புதங்கள்

Image
பலரும் அறியாத தமிழர்களின் அற்புதங்கள்  1. ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. 2. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 3. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4. தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது. 5. கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது. 6. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில்    நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது. 7. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )  8. சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு ச...

திருவண்ணாமலை

Image
திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.  இங்கு மலையே "இறைவனின் சொரூபமாக" விளங்குகிறது.  மலையே சிவலிங்கமாக காட்சியளிக்கிறது.  வல்லாள மன்னனுக்கு மகனாக  இறைவன் அவதரித்த தலமாகவும் விளங்குகிறது.  அன்னை பார்வதி தேவிக்கு இறைவன் தன்னுடைய  இடப்பாகத்தை அளித்த  தலமாகவும் விளங்குகிறது.    நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குகிறது.  அருணகிரிநாதர்,  பகவான் ரமண மகரிஷி, பகவான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் குகை நமச்சிவாயர், பகவான் யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள் ஆகியோர் அருள் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.  இங்கு உள்ள ராஜ கோபுரம் 217 அடி கொண்டதாகும்.  அண்ணாமலையார் திருக்கோயில் 24 ஏக்கர் கொண்டதாகும்.  நவ கோபுரங்களையும், ஏழு பிரகாரங்களையும் கொண்டது.  இங்கு உள்ள கிரிவலம் உலகப் புகழ் பெற்றது.  விசுவாமித்திரர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், அகத்தியர் மாமுனிவர்,  சனந்தனர் முதலானோர் இறைவன் அண்ணாமலையாரை வந்து வழிபட்டுள்ளனர்.  கார்த்திகை மாத தீப பெருவிழா இத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெ...

இந்து தர்ம சாஸ்திரம்

Image
இந்து தர்ம சாஸ்திரம் 1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; 2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; 3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; 4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். 5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம். 6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும். 7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும். 8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். 9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.  10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. 11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.  12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது. 13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது. 14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது. 15. கிழக்கு,...

புருவ மத்தியில் தியானம்

Image
 புருவ மத்தி என்பது எது? ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர். சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “. புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும்  “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர். இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது. புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா என்றால் அது தான் இல்லை? சிறிது சிந்தித்து பார்த்தல் இது புலப்படும். அதற்கு முன் அவ்வை பிராட்டி நமக்கு கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள் ”            “தேவர் குறளும் திருநான் மறை முடிபும்             மூவர் தமிழும் முனி மொழியும் – கோவை             திருவாசகமும் திருமூலர் சொல்லும்             ஒரு வாசகம் என்று உணர்” திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் தி...

குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்

Image
 *உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்* ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். 1. அசுவினி : செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். 2. பரணி : நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். 3. கார்த்திகை : பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். 4. ரோகிணி : கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். 5. மிருகசீரிடம் : தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம். 6. திருவாதிரை : எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர். 7. புனர்பூசம் : கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம். 8. பூசம் : பிறரை மதிப்...

மொட்டை போட்டுக் கொள்ளும் பழக்கம்

Image
மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது ? மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில் வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில்   அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன் உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் . அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள் நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள்.  இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன் என்று சபதமிட்டான் அர்ஜுனன்.  அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.   குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற  என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன் என கர்ஜித்தான் அர்ஜுனன்.  அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார்.   அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே , ஆனாலு...