96 தத்துவங்கள்
96 தத்துவங்கள்
தத்துவங்கள் 96 கீழே அதன் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது , இது ஒவ்வொருவரும் யோகா சாதனையின் மூலம் உணரக்கூடியதே , முழுவதும் உணர்ந்தால் தான் நன்கு புரியவும் வரும் , யோக சாதனையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் .
தத்துவங்கள்:
1. ஞானேந்திறியம் - 5
2. பொறி - 5
3. புலன்கள் - 5
4. கர்மேந்திரியம் - 5
5. அந்தக்கரணம் - 4
ஆக தத்துவங்கள் - 24
1. வித்யா தத்துவம் - 7
2. சிவ தத்துவம் - 5
3. பிற கருவிகள் - 60
மொத்தமாக 96 தத்துவங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
சற்று விரிவாக :
1.பூதங்கள் 5
2. ஞானேந்திறியம் 5
3. ஞ்யநேந்திரிய கிரியைகள் 5
4. கன்மேந்திரியம் 5
5. கன்மேந்திரிய கிரியைகள் 5
6. அறிவு1
7. கரணம் 4
8. நாடி 10
9. வாய்வு 10
10. ஆசயம் 5
11. கோசம் 5
12. ஆதாரம் 6
13. மண்டலம் 3
14. மலம் 3
15. தோஷம் 3
16. ஈஷனை 3
17. குணம் 3
18. விராகம் 8
19. வினை 2
20. அவஸ்தை 5
மொத்தமாக 96
--------------------------------------------------------------------------------------------------------------------------
தனி தனியாக தத்துவ விளக்கம்
1. பூதங்கள் 5 விளக்கம் :
1 . ஆகாயம் : பரவெளி - நிறம் - ஸ்படிகம் , இதன் கூறுகள் : காமம் , குரோதம் லோபம் , மோஹம் , மதம் ; மொத்தமாக 5
2 . வாய்வு : காற்று - நிறம் - புகை , பச்சை , ஸ்படிகம் . இதன் கூறுகள் : இருத்தல்,நடத்தல் ,ஓடல் ,கிடத்தல் ,நிற்றல் மொத்தமாக 5
3 . தேயு : நெருப்பு / அக்னி - நிறம் - சிகப்பு , இதன் கூறுகள் : பயம் , அகங்காரம் , சோம்பல் , நித்திரை , மைதுனம் ; மொத்தமாக 5
4 . அப்பு : ஜலம் - நிறம் - ஸ்படிக வெள்ளை . இதன் கூறுகள் : உதிரம் , மச்சை , சிறு நீர் , மூளை , சுக்கிலம் ; மொத்தமாக 5
5 . பிருதிவி : மண் - நிறம் - பொன்மை . இதன் கூறுகள் : மயிர் , தோல் நரம்பு , எலும்பு , இறைச்சி மொத்தமாக 5
2. ஞ்யநேந்திரியம் 5 விளக்கம் :
1 . சுரோத்திரம் - காது சப்தங்களை கேட்கும்
2 . த்வக்கு - மேல் தோல் - ஸ்பரிச உணர்வு
3 . சட்சூ - கண் - ரூபங்களை பார்க்கும்
4 . சிங்குவை - நாக்கு - அறுசுவைகளை அறியும்
5 . ஆகிரணம் - நாசி - வாசனைகளை அறியும்
3. ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :
1 . சப்தம் - செவியில் நின்று கேட்பது
2 . ஸ்பரிசம் - தேகத்தில் , சர்மத்திலிருந்து சுகமென்பதை தெரிவிக்கும்
3 . ரூபம் - கண்ணில் நின்று பல காட்சிகளை காண்பிக்கும்
4 . ரசம் - நாவில் நின்று அறுசுவையின் பேதங்களை அறிவிக்கும்
5 . கந்தம் - நாசியில் இருந்து வாசனை பேதங்களை உணர்த்தும்
4. கன்மேந்திரியம் 5 விளக்கம் :
1 . வாக்கு - வாய் - பேசுவது
2 . பாணி - கை - ஆட்டி அசைத்து வேலை செய்தல்
3 . பாதம் - கால் - நடத்தல்
4 . உபஸ்த்தம் - நீர் வரும் குறி - காம சுகம் அனுபவித்தல்
5 . குதம் - பாயுரு - ஆசனவாய்
5. கன்மேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :
1 . வசனம் - வாயில் இருந்து பேசுவிப்பது
2 . தானம் - கையில் இருந்து கொடுப்பது
3 . கமனம் - காலில் நின்று நடத்துவிக்கும்
4 . ஆனந்தம் - லிங்கம் , யோனியில் நின்று கர்மானந்தம் விளைவிக்கும்
5 . விசர்ஜனம் - அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்
6. அறிவு 1 விளக்கம் :
1 . அறிவு அல்லது உள்ளம் . இது ஆகாயத்தின் அம்சம் , ஆகையால் உச்சியில் இருந்து சகலத்தையும் செயல்விக்கும்.
7. நாடிகள் 10 விளக்கம் :
1 . இடகலை - வலது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி இடது நாசியை பற்றி நிற்கும்
2 . பிங்கலை - இடது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை பற்றி நிற்கும்
3 . சுழுமுனை - குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து சிரசளவு முட்டி நிற்கும்
4 . சிங்குவை - உண்ணாக்கில் நின்று அன்ன சாரம் ஊரவும் பானத்தை விழுங்கவும் செய்யும்
5 . புருடன் - வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்
6 . காந்தாரி - இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்
7 . அத்தி - வலக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்
8 . குரு - இடக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்
9 . அலம்புடை - கண்டத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்க உபாயங்கள் செய்யும்
10 . சங்கினி - உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத்தில் மிஞ்ச வொட்டாமல் காக்கும்
8. வாயு 10 விளக்கம் :
1 . பிராணன் - மூலாதாரத்தை சேர்ந்து மேல் நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று திரும்பி அலையும்படி செய்யும்
2 . அபானன் - குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி உண்ட அன்ன பானாதிகளை ஜீரணிக்க செய்யும்
3 . வியானன் - சர்வாங்கமும் வியாபித்து இருந்து பொருத்திடங்கள் எல்லாம் களைப்பும் தவனமும் உண்டாகசெய்யும்
4 . சமானன் - சரீரத்தின் நடுவான நாபிஸ்த்தானத்தில் நின்று ஜீரணித்த அன்ன பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடிகளின் வழியாக இழுத்து சென்று சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்
5 . உதானன் - கண்டஸ்தானத்தில் நின்று சத்ததோடே கலந்து குரலோசை செய்ய , பேசக்கூடிய காரியத்தை செய்யும்
6 . நாகன் - வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்
7 . கூர்மன் - கண் ரப்பையில் இருந்து விளிக்கசெயும்
8 . கிரிதரன் - மூக்கில் நின்று குறுகுறுத்து தும்மல் உண்டாக்கும்
9 . தேவதத்தன் - மார்பில் நின்று கபத்தை சேர்த்து நெட்டி , கொட்டாவி , விக்கல் உண்டாக்கும்
10 . தனஞ்செயன் - பிராணன் நீங்கின பிறகும் 3 நாட்கள் மட்டும் இருந்து சரீரம் வீங்கி வெடித்து போவான் , அக்னியில் சுடும்போது அப்போதே போய்விடும்
9. ஆசயம் 5 விளக்கம் :
1 . ஆமாசயம் - அன்னம் , தண்ணீர் பருகுமிடம்
2 . ஜலாசயம் - அன்னம் , தண்ணீர் இறங்குமிடம்
3 . மலாசயம் - மலம் சேருமிடம்
4 . ஜலஞ்சயாசம் - மூத்திரம் சேருமிடம்
5 . சுக்கிலாசயம் - விந்து நிறைந்து இருக்குமிடம்
10. கோசங்கள் 5 விளக்கம் :
1 . அன்னமய கோசம் - ஸ்தூல சரீரத்தை அழிக்காமல் நிலைக்கசெயும் .
2 . பிராணமய கோசம் - பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விவகாரம் செய்யும்
3 . மனோமய கோசம் - மலமும் கண்மேந்திரியமும் சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் சேர்ந்து செயல் படும்
4 . விஞ்ஞானமய கோசம் - புத்தியும் பொறிகளும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் செயல் படும்
5 . ஆனந்த மய கோசம் - காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து மேற்கூறிய பிராண , மனோமய , விஞ்ஞானமய கோசத்துடன் சூட்சும சரீரம் நிலைத்து நிற்கும்
11. ஆதாரங்கள் 6 சிறு விளக்கம் :
1 . மூலாதாரம் - குதத்துக்கும் , குய்யத்துக்கும் மத்தியில் உள்ள திரிகோண ஸ்தானம் , தேவி வல்லபை இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி - விநாயகர் .
2 . சுவாதிஷ்டானம் - முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி
3 . மணிபூரகம் - நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி
4 . அனாஹதம் - ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி
5 . விசுத்தி - கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி
6. ஆக்ஞா - முகத்தில் உள்ள புருவ மத்தி - திரிகோண உச்சஸ்தானம், இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி
12. அக்னி மண்டலம் 3 விளக்கம் :
1 . அக்னி மண்டலம் - மூலாதாரத்தில் இருந்து இளகி நாபி வரையில் முயற்சி செய்யும்
2 . ஆதித்த மண்டலம் - நாபியில் இருந்து கண்டம் வரை ஸ்திரம் செய்யும்
3 . சந்திர மண்டலம் - கண்ட ஸ்தானத்தில் இருந்து புருவ மத்தி வரை ஸ்திரமாகும்
13. மலங்கள் 3 விளக்கம் :
1 . ஆணவ மலம் - ஸ்தூல சரீரத்தை நான்தான் என்று நினைத்து இருக்கும்
2 . காமிய மலம் - கண்ணால் கண்டவைகளை எல்லாம் இச்சிக்கும்
3 . மாயா மலம் - தனக்கு நேரும் நிலையை தானறியாமலே செய்தல், கோபம் கொள்ளல்
14. முப்பிணிகள் :
1 . வாதம் - வாயுவின் கோபம்
2 . பித்தம் - அக்னியின் கோபம்
3 . சிலேத்துமம் - அப்புவின் கோபம்
15. ஈஷணை 3 விளக்கம் :
1 . தாரேஷனை - பெண்ணாசை ( ஆணாசை ) அதிகம் கொள்ளல்
2 . புத்திரேஷனை - புத்திர , புத்திரி மீது அதிக ஆசை
3 . அர்தேஷனை - பொருள்கள் மீது அதிக ஆசை வைத்தல்
16. குணங்கள் 3 விளக்கம் :
1 . சாத்வீகம் - நிறம் வெண்மை , சகலரும் மதிப்பர் , அமிர்த குணம் , இதில் லயித்து இருப்பவர் தத்துவ ஞான நிஷ்டை அடைவர்
2 . ராஜஸ குணம் - நிறம் சிவப்பு , இக்குணம் படைத்தவர் அகங்காரம் ஆணவம் உடன் இருப்பார்
3 . தாமச குணம் - நிறம் கருப்பு , இவர்கள் அதிக உணவு சோம்பல் , நித்திரை , மிகுந்த கோபம் எதிலும் நிலை இன்மை உடையவர் .
17. விரகங்கள் 8 விளக்கம் :
1 . காமம் - அதிக ஆசை கொள்ளல்
2 . குரோதம் - பகை கொள்ளல் , அன்பில்லாமை
3 . லோபம் - பிறர்க்கு ஈயாதவர் , கருமி
4 . மோகம் - பலவற்றிலும் ஆசைப்படுதல்
5 . மதம் - பிறரை மதியாதிருத்தல்
6 . மாச்சரியம் - மனதில் சதா விரோத எண்ணங்கள்
7 . இடும்பை - எல்லோரையும் உதாசீனபடுத்துதல்
8 . அஸ்சூயை - பொறாமைக்குணம்
18. அவஸ்த்தைகள் 5 ஸ்தானங்கள் :
1 . சாக்கிரம் - லலாடஸ்தானம் - ஆக்ன்யா சக்கரம்
2 . சொப்பனம் - கண்டஸ்தானம் - விசுத்தி சக்கரம்
3 . சுழுப்தி - ஹிருதயஸ்தானம் - அனாஹதம் சக்கரம்
4 . துரியம் - நாபிஸ்தானம் - மணிபூரகம் சக்கரம்
5 . துரியாதீதம் - குய்யஸ்தானம் - ஸ்வாதிஷ்டானம் , மூலாதாரம் சக்கரம்
மொத்தமாக 96 தத்துவங்கள் , இவை அனைத்தையும் அவர் அவர் அனுபவத்தில் உணர்ந்து அறிந்து தாண்டிய பிறகு , முக்தி என்னும் நிலைக்கு அடி எடுத்து வைக்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
கழுகின் மறுபிறவி கதை
பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும். இந்நிலையில் கழுகு தனித்திருக்கத் தொடங்கும்.
தனித்திருப்பதற்காக காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும். அங்கு சென்று, தனது அலகின் மூலம் அதன் சிறகுகளையும், நகங்களையும் பிடுங்கி விடும். பின்னா் அதன் அலகினை பாறையில் உரசி உதிா்த்து விடும். இதனால் அதன் உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும். அப்போது அது ஒரு புதிதாய்ப் பிறந்த கழுகின் அளவுக்கு உருமாறியிருக்கும்.
எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும். இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும். நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு, நகங்களும், அலகும் கூா்மையாகவும் வளா்ந்து ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும். அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும் அது வானில் சக்கரவா்த்தியாய் வலம் வரும்.
மூன்று மாதம் தனித்திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு 30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது கழுகு. கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அது வலியோடு ஆரம்பித்தாலும் அற்புதமானதொரு புதிய வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும்.
தனித்திருத்தலில் வலிகளை நினைத்துக் கொண்டிருக்காமல்,
புதிய வழிகளை உருவாக்குபவருக்குத்தான் அது சாத்தியமாகும்.
படித்ததில் ரசித்தது...
Comments
Post a Comment