தந்திர யோகம்
ஆயுளை நீடிக்கும் அற்புத தந்திர யோகம் -விஞ்ஞான பைரவ தந்திரம்
யோகத்தின் -காரண சாதனங்கள் இரண்டாக, சித்தர்கள் தங்கள் நூல்களில், வழி மொழிகிறார்கள் .
ஒன்று மந்திரப் பிரயோகத்தின் மூலம் தூண்டுதல், மற்றொன்று தந்திர பிரயோகத்தின் மூலம் தூண்டுதல். அப்படி ஆயுளை நீடிக்கும் ஒரு எளிமையான தந்திர பயிற்சி இது.
திரு மூலரின் ,இந்த பாடலை கவனியுங்கள் ,
"ஏற்றி இறக்கி இரு காலும்பூரிக்கும் - காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை .......... காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு - கூற்றை உதைக்கும் குறி அதுவாமே! " ...........திரு மூலர் ,
அட்ட மா யோகத்தின், நான்காவது படி நிலையான, பிராண யாமம் என்னும், மூச்சு பயிற்சியின் நுட்பத்தை சொல்கிறார்.இதை பயிற்சி செய்வதகு, முறையான உரை நடை இல்லை. இதற்கான எளிமையான பயிற்சி, அதே சித்தர்களால், விஞ்ஞான பைரவ தந்திரம் என்ற நூலில், சிவன் -சக்திக்கு உபதேச உரையாக, காணப் படுகிறது.
சித்தர்களின் உயிர் விளையாட்டு நுட்பம், அதை கையாண்ட விதம், அறிவியல் பூர்வமானது, என்பதை இதன் மூலம் அறியலாம்.
தந்திரம் பயிற்சி - மிக முக்கியமான, குருப்பிடத்தக்க விஷயம், இந்த பயிற்சிக்கு, ஆசனம், இடம், கருவி எதுவும் தேவையில்லை.
1.உயிர் வாழும் எல்லா உயிர்களுக்கும், பிராணன் என்னும் மூச்சு காற்று நாசியின் வழியாக - உள் இழுக்க பட்டும், வெளியேற்ற பட்டும் கொண்டு இருக்கிறது.
2.தந்திரம் சொல்வது என்னவென்றால், உள் இழுத்தல் ,வெளியேற்றல் என்ற இரண்டு செயல்களுக்கு நடுவே, உள் செல்லும் காற்று, சில நொடிகள் (காலம்), உள் நின்று வெளி செல்வது, நாம் கவனிக்காத ஒரு விஷயம்.
3.உள் நிற்கும் - அந்த இடத்தில், மனதை ஒரு முக படுத்தி, தியானிக்க முயற்சி செய்ய சொல்கிறார்கள். இங்கே ஒரு விஷத்தை, நினைவு கூற விரும்புகிறேன். தியானம் செய்வது எப்படி? என்ற வினா எழலாம்.
4.அட்ட மா யோகத்தின் படி நிலைகளில், முதல் ஐந்து பிரிவுகளான, இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம் ஆகியவை புற யோகம் என்று அழைக்க படுகிறது.
5.தாரணை, தியானம், சமாதி - இது மூன்றும் அக யோகம் என்றும், புற யோகமும், அக யோகமும் - தங்களுக்குள் ஒன்றுக்கொன்று தொடர் புடையது என்று யோகா நூல்கள் கூறுகின்றன.
6.மேலும், 12 அல்லது 16 தாரணை (ஒன்றையே நினைப்பது என்று பொருள் )-ஒரு தியானம் என்றும், 16 தியானம் - ஒரு சமாதி, எனவும் கூற படுகிறது.
தந்திர பயிற்சியின் விளைவுகள் :
1.தியானம் பயிலும் போது, நினைவுகள் அலைகழிக்க படுவது இயற்கை. உதரணமாக பயிற்சியில் ஈடு படும் போது, நமது மனம், இறந்த கால நினைவுகளான, சில விசயங்களை அசை போடும். அவற்றை நீக்கும், வழி முறையே -16 முறை தாரணை என்றும், ஒன்றை பற்றிய, தொடர் நினைவே தியானம் என்று, கூற படுகிறது. ஒரு முறை தவறினாலும், தொடர்பு அற்று போகிறது. இப்பொழுது நிகழும் தியான விளைவுகளை, சித்தர்கள் கீழ் கண்டவாறு, வரிசை படுத்துகிறார்கள்.
2.தியானம் - கண்களை மூடிக்கொண்டோ, திறந்து கொண்டோ, செய்யலாம். நீண்ட பயிற்சியில், கண்களை மூடாமல் செய்யலாம்.
3.தியானிக்கும் இடத்தில் முதலில் சில ஒளி சிதறல்கள் தோன்றுமாம். நேரம் கடக்க, கடக்க ஒளி சிதறல்கள் விரிவடைய தொடங்குமாம், அதன் பிறகு நடக்குமாம் சூட்சுமம்.
4.உங்களின் மூச்சு காற்று, ஒளி விரிய, விரிய - ஒரே சீராக ஆழமாக இழுக்க படுவதை, உணர்வீர்கள் . அவ்வாறு இழுக்க படும், காற்றை கவனித்தீர்கள் என்றால், அது ஒவ்வொரு ஆதாரமாக கடந்து மூலாதாரத்தை, அதாவது, அடி வயிறு வரை இழுக்க படுவதை, கவனிக்கலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். இதோடு முடிந்து விட்டதா ! என்று நினைதொமானால், அடுத்த அதி சூட்சும நிலையை விளக்குகிறார்கள்.
5. மிக முக்கியமான பயிற்சி நிலை இதுதான் ! ஒரு பயிற்சியின் மிக நுட்பமான முடிவு நிலை-உங்களின் மூச்சு காற்று, உண்மையிலயே மூலாதாரத்தை தொடும் போது , ஒரு அற்புதம் நிகழும் ! உங்களுடைய எந்த ஒரு தூண்டுதலோ சுய முயற்சி இல்லாமலே, உங்கள் மல துவாரம்(anal oriface) தானாக உள் நோக்கி சுருங்கி , மூச்சு காற்றை முத்தமிடுவதை உணர்வீர்கள் !. பிராண, அபானன் ஒன்றுகொன்று கலப்பதை காண்பீர்கள் !
இந்த பயிற்சியின் போது, வெறும் வயிற்றில் செய்வது நல்லது , அஸ்வினி முத்திரை பயன் படுத்தினால், நீங்கள் செய்கின்ற யோகம், சரிதானா !என்று சரி பார்க்கலாம். எப்படி?
நாக்கை உள் நோக்கி மடித்து கொண்டு, இந்த தந்திர யோகம் பயிலுங்கள், யோகம் சித்தியானால், பயிற்சியின் போது, நாக்கானது தொண்டையை நோக்கி உள் இழுக்க படும். கண்கள் தானாகவே மேல் நோக்கி இழுக்க பட்டு, புருவ மத்தியை நோக்கி செல்லும்!
சித்தர்களின் ஒரு அறிவியல் கால கணக்கு உங்களுக்காக
மனிதர்களுக்கு சுவாச செலவு ஒரு நாளைக்கு -21600 சுவாசமாம். இயற்கையின் படி, உங்கள் ஆயுள் 80 வருடம் எனில், யோகா பயிற்சியின் மூலம், உங்கள் சுவாசத்தை, ஒரு நாளைக்கு, பாதியாக குறைத்து, அதாவது 10800 சுவாசமாகினால், உங்கள் ஆயுள் நாற்பது வருடம் இயல்பாகவே கூடி, 120 வருடம் என்று ஆகி விடும்.
என்னே ! நம் சித்த அறிவியல் !
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் எல்லா வளங்களும் பெற்று சிவ அருளுடன் வாழ்க

Comments
Post a Comment